ஓம் நமச்சிவாய
அருள் மிகு ஸ்ரீ ஞாணாம்பிகை உடனுறை முத்தீஸ்வரர்
சேவா அறக்கட்டளை
படாளம் கிராமம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603308
பசுமை எழில் கொஞ்சும் படாளம் கிராமம், செங்கல்பட்டிற்கு மிக அருகில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது;
இங்கு வரலாற்று சான்று வாய்ந்த கோவில்கள் பலப்பல. அவற்றுள் மிக முக்கியம் வாய்ந்தது பல்லவர் காலத்து அருள் மிகு ஸ்ரீ முத்தீஸ்வரர் ஆலயமாகும் .
இக்கோவிலில் தமிழகத்தில் வெகு சில இடங்களில் மட்டும் காணக்கூடிய ஆறு முகம் கொண்ட முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். மேலும் இங்கு ஸ்ரீ முத்தி விநாயகர், ஸ்ரீ காசி விஸ்வநாதர் , ஸ்ரீ ஞாணாம்பிகை, ஸ்ரீ குரு பகவான், ஸ்ரீ நந்தி போன்ற தெய்வ சிற்பங்களும் சிறப்பாக அமைந்து ள்ளன.
பல சிறப்புகள் வாய்ந்த இவ்வாலயம் பக்தர்களால் புதுப்பிக்கபட்டுக்கொண்டிருகிறது.
இதன் ஆரம்பமாக, கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பக்தர்களால் பாலாலய விழா மிக சிறப்பாக நடை பெற்றது.